Monday 20 June 2011

அண்ணமார் சாமி கதை

 அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்.

அண்ணன்மார்சாமி கதை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

மேலும் சில பதிப்பர்களின்  கருத்துக்கள் அறிய இங்கே மற்றும் இங்கே.

Tuesday 14 June 2011

விக்ரமாதித்தன் கதைகள்

உங்களில் பலர் சிறிய வயதில் விக்ரமாதித்தன்  கதைகளை படித்திருக்கக்கூடும், அந்த கதைகளை தற்போது PDF வடிவில் இங்கே கொடுத்திருக்கிறேன், இதில் முழுக்கதையும் உள்ளது.


விக்ரமாதித்தன் கதைகளின் பொருளடக்கம்

கதையின் ஆசிரியர்: அரு. ராமநாதன்
                            

Thursday 9 June 2011

சரித்திர நாவலில் வரலாறு படைத்த சாண்டில்யன்

  சாண்டில்யன் - வரலாற்றுப் புதினங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களால் இந்தப் பெயரை மறக்கவே முடியாது.

*சாண்டில்யனின் நூற்றாண்டுவிழா, 6.11.2010 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.  *

தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூர் அவரது சொந்த ஊர்.

1910ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும்,
பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

சாண்டில்யன்
பிறந்த ஊர் திருக்கோவிலூர்.

அவரது இயற்பெயர் எஸ்.பாஷ்யம்.

கல்லூரிப் படிப்பில் "இன்டர்மீடியட்" படித்தார்.

அப்போதே அவருக்குத் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.

காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய பிறகு, சென்னை வந்த அவருக்கு, அறிஞர் வெ.சாமிநாத சர்மா, கல்கி போன்றோர் நண்பர்களாயினர்.

இருவருடனும் பழகியதால் சிறுகதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

அந்நாளில், "திராவிடன்" இதழாசிரியர் தோழர் சுப்பிரமணியம் நண்பரானார்.

அவருடைய "திராவிடன்" இதழில் "சாந்தசீலன்" என்ற சிறுகதையை எழுதினார்.

அந்தக் கதையைப் படித்த கல்கி, அவர் ஆசிரியராக இருந்த "ஆனந்த விகடனில்" எழுத வற்புறுத்தினார்.

சாமிநாத சர்மா ஆசிரியராக இருந்த "நவசக்தி"யிலும் சாண்டில்யனின் கட்டுரைகள் வெளிவந்தன.

சாண்டில்யன் எழுதிய "பலாத்காரம்" என்ற முதல் நாவலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சிறப்பாக முன்னுரை எழுதியிருக்கிறார்.

பிற்காலத்தில், "புரட்சிப்பெண்" என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது.

சாண்டில்யனுக்குத் தன்னம்பிக்கை அதிகம்.

"ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும்.
ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்''என்று, சாண்டில்யனே ஒருமுறை கூறியிருக்கிறார்.

சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியர்
ஸி.ஆர்.சீனிவாசன், அவரை நிருபர் பணியில் அமர்த்தினார்.

சாண்டில்யன், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார்.

சாண்டில்யன் நிருபர்களுக்கு வழக்கு மன்றத்திலிருந்த "மரியாதை"யை சுவைபட விவரித்து, "ஆங்கில ஏடுகளின் நிருபர்களுக்கு மட்டும் நீதிமன்றத்தில்
வசதியாகவும் மற்ற தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் நின்றுகொண்டுதான் எழுதவேண்டிய நிலை" உள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியும், எழுதியும் வந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை சுதேசமித்திரனில் வெளிவரச் செய்தார்.

சுதேசமித்திரன் செய்தி வழக்கறிஞர்களிடையே பரவியது.

சாண்டில்யனுக்கு உட்கார நாற்காலி வசதி செய்யப்பட்டது.

நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை எங்கும் பேசப்பட்டது.

1937இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதினார்.

சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது.

பின்னர் சில கருத்துவேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவி தரப்பட்டது.

இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி "ஹிந்துஸ்தான்" வார இதழில் சேர்ந்தார்.

சாண்டில்யனுக்கு, சினிமா, நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

"ஹிந்துஸ்தானி"ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

திரைப்படக் கலையில் முன்னணியில் நிற்க வேண்டுமென்று இயற்கையாகவே அவரிடம் இருந்த இலட்சியம் அப்போது நிறைவேறியது.

சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொல்லியிருக்கிறார்.

சினிமா பற்றி இராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து "சினிமா பார்ப்பது கெடுதலா?" என்ற கட்டுரையை 1952இல் எழுதினார்.

எனக்கு சினிமாவைப் பற்றி ஏதாவது தெரிகிறது என்றால், அதற்குக் காரணமானவர்கள் பி.நாகி ரெட்டி, வி.நாகையா, கே.இராம்நாத் ஆகியோர்தான்.

"பதினான்கு ஆண்டுகள் சினிமா உலகில் இருந்தேன். அப்போதெல்லாம் கதையை எழுதக் குறைந்தது ஆறுமாதங்களாகும். கதையை எழுதினால் மட்டுமே போதாது. "ஷூட்டிங் ஸ்கிரிப்ட்" தயாரிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

வி.நாகையாவின் "தியாகையா" வெற்றிக்கு சாண்டில்யன் பெரிதும் காரணமானவர்.அந்தப் படம் வெளிவந்த பிறகு, புகழின் உச்சியில் இருக்கும்போதே திரைப்படத்
துறையிலிருந்து விலகிவிட்டார்.

இளம் வயதிலிருந்தே அவரின் இலட்சியம் எழுத்தாளராக வேண்டுமென்பது.

பிரபலமாக விற்பனையாகும் பத்திரிகைக்கு ஆசிரியராக வேண்டுமென்பது.

முதல் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது.

இரண்டாவது எண்ணம் சொந்தமாகப் பத்திரிகை நடத்தி, வெற்றி பெறவில்லை.

சில காரணங்களால் மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார்.

"ஞாயிறு மலர்" என்ற சிறப்புப் பகுதியின் பொறுப்பாளரானார்.

சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையிலும் எழுதினார்.

"அமுதசுரபி"யில் சரித்திர நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்ட சிறுகதைகளை அவ்வப்போது எழுதினார்.

"சரித்திர நாவல் எழுதும் தாங்கள், வரலாற்றுப் புதினங்கள் எழுதவேண்டும்" என்று "அமுதசுரபி" நிறுவனத்தார் கேட்டுக்கொண்டதால், "ஜீவபூமி" என்ற சரித்திரத் தொடரை எழுதினார்.

"ஜீவபூமி" தொடர், பின்னர் பிரபல அமெச்சூர் நாடக மன்றத்தாரால் நாடகமாக
அரங்கேற்றப்பட்டது.

"ஜீவபூமி" தொடருக்குப் பிறகு, "மலைவாசல்" என்ற தொடரை எழுதினார்.

"மலைவாசல்" புதினத்துக்குக் கிடைத்த வாசகர்களின் வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது.

கன்னிமாடத்தில் தொடங்கி, கடல்புறா (மூன்று பாகங்கள்), யவனராணி முதலிய பிரம்மாண்டமான நாவல்களை எழுதினார்.மொத்தம் 50 நூல்களை எழுதியுள்ளார்.அவற்றில், 42 சரித்திர நாவல்கள்.

மற்றவை சமூக நாவல்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள்.

இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் "கடல்புறா".மூன்று பாகங்கள்; மொத்தம் 2,000 பக்கங்கள். கையெழுத்துப் பிரதிகள் 20,000 பக்கங்களுக்கும் மேல்.
இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படக் கதை வசனகர்த்தா, வரலாற்று
நாவலாசிரியர்கள் போன்றோரிடையே முன்னணி இடத்தைத் தேடிக்கொண்டவர் எனப் பலமுகத் திறமைகளோடு முன்னேறிக் கொண்டிருந்த சாண்டில்யன், உழைக்கும்
பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் பெரும்பாடுபட்டு, "தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை"த் தொடங்கினார்.

அது "தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்" என்ற பெயரில் பிரபலமடைந்தது.தனக்கு நியாயம் எனத் தோன்றாததை எதிர்த்து அவர் பேனா சீறிப்பாயும்.

நாடகமோ, திரைப்படமோ, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் போர்க்கொடி உயர்த்தத் தயங்கமாட்டார்.

நண்பர் என்றும் வேண்டியவர் என்றும் பார்க்க மாட்டார்.

சரித்திரக் கதை சக்கரவர்த்தி சாண்டில்யன், "சீனத்துச் சிங்காரி" என்ற தொடரை
"குமுதம்" வார இதழில் எழுதத் தொடங்கியபோது, திடீரென நோய்வாய்ப்பட்டார்.

மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதினார்.

மருத்துவமனையில் இருந்தபோதும், மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகும் சாண்டில்யனைச் சந்தித்துப் பேசும்போது, "சீனத்துச் சிங்காரி"யின் கதையைப் பற்றி நாங்கள் விவாதிப்பது வழக்கம்.

இதையறிந்த, "குமுதம்" பதிப்பாளர் என்னிடம், "நீங்கள்தான் சீனத்து சிங்காரியைத் தொடர வேண்டும்'' என்று வற்புறுத்தினார்.

"சாண்டில்யன் எழுத்து எங்கே? என் எழுத்து எங்கே? அவர் எழுத்து பட்டு நூல்;
என்னுடையது பருத்தி நூல். இரண்டையும் சேர்த்துப் பட்டாடை நெய்து முடிப்பது சரியாகாது''என்று மறுத்துவிட்டேன்.

முடிவடையா கோபுரமாய் "சீனத்துச் சிங்காரி" நின்றுவிட்டது.

சாண்டில்யனுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அவரது இரு குமாரர்களில் மூத்தவர், சடகோபன் பேராசிரியர்.

இளையவர் கிருஷ்ணன், வைஷ்ணவ கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.
மகள்களுள் ஒருவரான பத்மா சாண்டில்யன், இசையில் மிகவும் சிறந்து விளங்குகிறார்.

எழுத்துலகில் நிலை நிற்கத்தக்க அழியாத பல படைப்புகளை நல்கி, வாசகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர் சாண்டில்யன்.

கலைமாமணி விக்கிரமன்

நன்றி:- தினமணி

மேலும் அவரை பற்றி அறிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து மற்றும்  கூட்டாஞ்சோறு ஆகிய வற்றிலிருந்து

Wednesday 8 June 2011

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல் மற்றும் பதிவிறக்கம்

        தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.
    இப் பட்டியலில் புதினங்களின் தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் தரப்பட்டுள்ளன.
இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

1. மோகனாங்கி - த.சரவணமுத்துப்பிள்ளை (1895)
2. பொன்னியின் செல்வன் - கல்கி
3. சிவகாமியின் சபதம் - கல்கி
4. சோலைமலை இளவரசி - கல்கி
5. பார்த்திபன் கனவு - கல்கி
6. வேங்கையின் மைந்தன் - அகிலன்
7. கயல்விழி - அகிலன்
8. வெற்றித்திருநகர் - அகிலன்
9. மணிபல்லவம் - நா. பார்த்தசாரதி
10. அலைஅரசி - சாண்டில்யன்
11. அவனி சுந்தரி - சாண்டில்யன்
12. சேரன் செல்வி - சாண்டில்யன்
13. இளையராணி - சாண்டில்யன்
14. ஜலமோகினி - சாண்டில்யன்
15. ஜலதீபம் - சாண்டில்யன்
16. ஜேவபூமி - சாண்டில்யன்
17. கடல்புறா - சாண்டில்யன்
18. கடல் வேந்தன் - சாண்டில்யன்
19. கடல் ராணி - சாண்டில்யன்
20. கன்னி மாடம் - சாண்டில்யன்
21. மலை அரசி - சாண்டில்யன்
22. மலை வாசல் - சாண்டில்யன்
23. மஞ்சள் ஆறு - சாண்டில்யன்
24. மன்னன் மகள் - சாண்டில்யன்
25. மோகனச் சிலை - சாண்டில்யன்
26. மோகினி வனம் - சாண்டில்யன்
27. முகில் கோட்டை - சாண்டில்யன்
28. நாகதேவி - சாண்டில்யன்
29. நாக தீபம் - சாண்டில்யன்
30. நங்கூரம் - சாண்டில்யன்
31. நீள்விழி - சாண்டில்யன்
32. நீலவல்லி - சாண்டில்யன்
33. நிலமங்கை - சாண்டில்யன்
34. பல்லவ பீடம் - சாண்டில்யன்
35. பல்லவ திலகம் - சாண்டில்யன்
36. பாண்டியன் பவானி - சாண்டில்யன்
37. ராஜ பேரிகை - சாண்டில்யன்
38. ராஜ முத்திரை - சாண்டில்யன்
39. ராஜ திலகம் - சாண்டில்யன்
40. ராஜ யோகம் - சாண்டில்யன்
41. ராஜ்யசிறீ - சாண்டில்யன்
42. ராஜ்யசிறீ - சாண்டில்யன்
43. ராணியின் கனவு - சாண்டில்யன்
44. சித்தரஞ்சனி - சாண்டில்யன்
45. உதயபானு - சாண்டில்யன்
46. விஜய மகாதேவி - சாண்டில்யன்
47. விலை ராணி - சாண்டில்யன்
48. யவன ராணி - சாண்டில்யன்
49. வசந்த காலம் - சாண்டில்யன்
50. மதுராந்தகி -ஜெகசிற்பியன்
51. நந்திவர்மன் காதலி -ஜெகசிற்பியன்
52. நாயகி நற்சோணை -ஜெகசிற்பியன்
53. ஆலவாயழகன் -ஜெகசிற்பியன்
54. மகரயாழ் மங்கை -ஜெகசிற்பியன்
55. மாறம்பாவை -ஜெகசிற்பியன்
56. பத்தினிக் கோட்டம் -ஜெகசிற்பியன்
57. சந்தனத் திலகம் -ஜெகசிற்பியன்
58. திருச்சிற்றம்பலம் -ஜெகசிற்பியன்
59. கோமகள் கோவளை -ஜெகசிற்பியன்
60. டணாயக்கன் கோட்டை - இமையம் (1956)
61. குற்றாலக் குறிஞ்சி - கோவி மணிசேகரன்
62. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
63. கோபுர கலசம் — எஸ்.எஸ். தென்னரசு
64. ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
65. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
66. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
67. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
68. இராஜாதித்தன் சபதம் - விக்கிரமன்
69. ஈழவேந்தன் சங்கிலி - கௌதம நீலாம்பரன்
70. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி
71. கரிகால் வளவன் - கி. வா. ஜகந்நாதன்
72. கலிங்க ராணி - சி. என். அண்ணாதுரை
73. காஞ்சி சுந்தரி - விக்கிரமன்
74. குலோத்துங்கன் சபதம் - விக்கிரமன்
75. கொன்றை மலர் குமரி - விக்கிரமன்
76. கோவூர் கூனன் - விக்கிரமன்
77. சித்திரவல்லி தியாகவல்லபன் - விக்கிரமன்
78. சேரமான் காதலி - கண்ணதாசன்
79. சோழ இளவரசன் கனவு - விக்கிரமன்
80. சோழ மகுடம் - விக்கிரமன்
81. தெற்குவாசல் மோகினி - விக்கிரமன்
82. நந்திபுரத்து நாயகி - விக்கிரமன்
83. பராந்தகன் மகள் - விக்கிரமன்
84. மாணிக்க வீணை - விக்கிரமன்
85. ராஜராஜன் சபதன் -
86. நந்திவர்மன் காதலி - ஜெகசிற்பியன்
87. நித்திலவல்லி - நா. பார்த்தசாரதி
88. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி
89. பல்லவன் தந்த அரியணை - கௌதம நீலம்பரன்
90. பாண்டிய குமாரன் - குரும்பூர் குப்புசாமை
91. பொன்னர் சங்கர் - மு. கருணாநிதி
92. யயாதி - வி. ச. காண்டேகர்
93. சோழ நிலா - மு. மேத்தா
94. சோழ வேங்கை - கௌதம நீலாம்பரன்
95. தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் - அனுஷா வெங்கடேஷ்
96. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி
97. சாணக்கியரின் காதல் - கௌதம நீலாம்பரன்
98. சேது நாட்டு வேங்கை – இந்திரா சௌந்தரராஜன்
99. பொன் அந்தி – எஸ்.பாலசுப்ரமனியம்
100. காஞ்சிபுரத்தான் – ரா.கி.ரங்கராஜன்
101. பாண்டிமாதேவி – நா.பார்த்தசாரதி
102. உடையார் – பாலகுமாரன்
103. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா (1983)
104. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
105. வானம் வசப்படும் - பிரபஞ்சன்
106. வருசநாட்டு ஜமீன் கதை - வடவீர பொன்னையா (1999)
107. நீலக்கடல் - நாகரத்தினம் கிருஷ்ணா
108. எஸ்.எம்.எஸ்.எம்டன் – 22-09-1914 - திவாகர் (2009)
109.அண்ணமார் சாமி கதை 

நண்பர்களே! இதில் விடுபட்டவைகளை அறிந்தால் அதை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?நன்றி..

இந்த பதிப்பு    தமிழ்த்தேனீ யில்    இருந்து  எடுக்க பட்டது

நன்றி : தமிழ்தேனீ